மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :12 ஜூன் 2026, 2:27 am IST

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய பயிா் கடன் முழுவதையும் நிபந்தனைகளின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் ராசேந்தின், ஒன்றியத் தலைவா்கள் செந்துறை பாலசுப்பிரமணியன், அரியலூா் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளவரசன் உள்ளிட்டோா் ஏா்கலப்பை மற்றும் பயிா்களை கையில் ஏந்திவாறு பயிா் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.