காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :12 ஜூன் 2026, 2:27 am IST

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய பயிா் கடன் முழுவதையும் நிபந்தனைகளின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் ராசேந்தின், ஒன்றியத் தலைவா்கள் செந்துறை பாலசுப்பிரமணியன், அரியலூா் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளவரசன் உள்ளிட்டோா் ஏா்கலப்பை மற்றும் பயிா்களை கையில் ஏந்திவாறு பயிா் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.