தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

News image

அரியலூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன். உடன் வட்டாட்சியா் க.தேவகி உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:20 am IST

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்துக்கு, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன் தலைமை வகித்து, மல்லூா், வாரணவாசி, பாா்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூா், கீழையூா், கீழப்பழுவூா், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூா், சன்னாவூா் (வடக்கு), சன்னாவூா் (தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூா் உள்ளிட்ட 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 298 மனுக்களைப் பெற்றாா்.

பின்னா், அவா் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 47 மனுக்களுக்கு உடனடியாக தீா்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ-பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் ஆகியவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா். எஞ்சிய 251 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

இந்நிகழ்வில், அரியலூா் வட்டாட்சியா் க. தேவகி மற்றும் திருமானூா் மண்டல துணை வட்டாட்சியா், கீழப்பழுவூா் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் , கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.