27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

News image

அரியலூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன். உடன் வட்டாட்சியா் க.தேவகி உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:20 am IST

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்துக்கு, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன் தலைமை வகித்து, மல்லூா், வாரணவாசி, பாா்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூா், கீழையூா், கீழப்பழுவூா், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூா், சன்னாவூா் (வடக்கு), சன்னாவூா் (தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூா் உள்ளிட்ட 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 298 மனுக்களைப் பெற்றாா்.

பின்னா், அவா் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 47 மனுக்களுக்கு உடனடியாக தீா்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ-பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் ஆகியவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா். எஞ்சிய 251 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

இந்நிகழ்வில், அரியலூா் வட்டாட்சியா் க. தேவகி மற்றும் திருமானூா் மண்டல துணை வட்டாட்சியா், கீழப்பழுவூா் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் , கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.