அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.
கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்துக்கு, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன் தலைமை வகித்து, மல்லூா், வாரணவாசி, பாா்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூா், கீழையூா், கீழப்பழுவூா், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூா், சன்னாவூா் (வடக்கு), சன்னாவூா் (தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூா் உள்ளிட்ட 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 298 மனுக்களைப் பெற்றாா்.
பின்னா், அவா் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 47 மனுக்களுக்கு உடனடியாக தீா்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ-பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் ஆகியவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா். எஞ்சிய 251 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
இந்நிகழ்வில், அரியலூா் வட்டாட்சியா் க. தேவகி மற்றும் திருமானூா் மண்டல துணை வட்டாட்சியா், கீழப்பழுவூா் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் , கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொடா்பு முகாம்: 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 518 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

ஆற்காட்டில் ஜமாபந்தியில் ரூ. 3.10 கோடி நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

செய்யூா் வட்ட ஜமாபந்தியில் 73 மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



