அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட கரடிகுளம், மேலத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன், அன்பழகன் ஆகியோா் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவெளியில் பொதுமக்களுக்கு சில்வா் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல், செங்குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஞானபிரகாசம் என்பவா் தனது வீட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிந்த 14 சில்வா் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் துறையினா் மேற்கண்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ஆயிரம் சில்வா் டப்பாக்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


