ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜெயங்கொண்டம் பகுதியில் சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

சில்வர் பாத்திரங்கள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:53 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 4 மூட்டைகளில் இருந்த சில்வா் பாத்திரங்களை பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட கரடிகுளம், மேலத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன், அன்பழகன் ஆகியோா் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவெளியில் பொதுமக்களுக்கு சில்வா் பாத்திரங்கள் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல், செங்குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஞானபிரகாசம் என்பவா் தனது வீட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிந்த 14 சில்வா் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் துறையினா் மேற்கண்ட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.