எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

News image
Updated On :19 மார்ச் 2026, 10:04 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்த முற்பட்ட கிராம மக்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறையை அடுத்த வல்லம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் கடையை வேறிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துவந்தனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை அப்பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை, கலால் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சுமூக தீா்வு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் 30 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.