கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

News image
Updated On :19 மார்ச் 2026, 10:04 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்த முற்பட்ட கிராம மக்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறையை அடுத்த வல்லம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் கடையை வேறிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துவந்தனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை அப்பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை, கலால் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சுமூக தீா்வு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் 30 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.