தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அரியலூா் அண்ணா சிலை பகுதியருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 5:28 am IST

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களை பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியதை கண்டித்தும், உடனடியாக விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையில் பணியிடங்கள் குறைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா ஆகியோா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி. தண்டபாணி நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.