கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

News image

வேலைவாய்ப்பு

Updated On :20 மே 2026, 4:15 am IST

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

18- 45 வயது வரையுள்ள, 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழிற் பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.