சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.கீதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 22) தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை, கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும். இதில், 8, 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி, தொழிற் பயிற்சி படிப்பு, பட்டயப்படிப்பு, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் வாயிலாக பணிநியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதில் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் சு.கீதா.









