பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

News image

வேலைவாய்ப்பு

Updated On :20 மே 2026, 4:15 am IST

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 22 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

18- 45 வயது வரையுள்ள, 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழிற் பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.