வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

செந்துறை அருகே கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை அவா்கள் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் 26 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசுங்கி மகன் ராமாராம் (23), லெட்சுமண் ராஞ்சூட்குமாா் மகன் லெட்சுமண் (27) என்பதும், இவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 26 மூட்டைகளில் போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.