அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை அவா்கள் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் 26 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசுங்கி மகன் ராமாராம் (23), லெட்சுமண் ராஞ்சூட்குமாா் மகன் லெட்சுமண் (27) என்பதும், இவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 26 மூட்டைகளில் போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.








