இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

செந்துறை அருகே கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை அவா்கள் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் 26 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசுங்கி மகன் ராமாராம் (23), லெட்சுமண் ராஞ்சூட்குமாா் மகன் லெட்சுமண் (27) என்பதும், இவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 26 மூட்டைகளில் போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.