உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 35 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். முன்னாள் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் நா.பெரியசாமி தலைமையில் அக்கட்சியினர் காலை 11 மணியளவில் கரூர் ரயில்நிலையம் நுழைவுவாயில் முன் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டவாறு ரயில்நிலையம் நோக்கி விரைந்து எர்ணாகுளம் - நாகர்கோவில் ரயிலை மறிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுவின் எம்.ஷேஷன், பி. பாலன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் புஷ்பா உள்ளிட்ட 35 பேரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


