கரூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் வழக்குகளில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனி நபர்கள் அல்லது அமைப்புகள் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு, வழக்குகளுக்கு மத்தியஸ்தம் மற்றும் சமரசப் பேச்சு மூலம் எளிய வழியில் இரு தரப்பினரின் கருத்தொற்றுமையுடன் தீர்வு காண்பதை வலியுறுத்தி, மத்தியஸ்தம் தொடர்பாக பொதுமக்களிடையே பெருமளவில் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப் பட உள்ளது. இந்த விழிப்புணர்வு கூட்டம் வரும் 9 ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட வளாகத்தில் நடைபெறும்.
கூட்டத்தில் உயர்மட்ட நீதித்துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் இதர மாவட்ட அலுவலர்கள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் மற்றும் சமரச நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


