தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உப்பிடமங்கலம் அருகே சாலை விபத்தில் இருவர் சாவு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே  திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்

Updated On :25 டிசம்பர் 2018, 9:53 am IST

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே  திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், சித்தலவாய் அருகிலுள்ள முனையனூரைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி ஜெயபால் பொம்மன் (33). இவரது மனைவி திலகவதி (29). மகன் கிரி  (3). கரூரில் தையல் கடை அமைப்பது தொடர்பாக திங்கள்கிழமை மாலை  உறவினரைச் சந்தித்துவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் ஜெயபால் பொம்மன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
உப்பிடமங்கலம் அருகே லிங்கத்தூர் பிரிவில் சென்ற போது, எதிரே அம்மாபட்டியைச் சேர்ந்த பிரபாகர் (23)  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஜெயபால் பொம்மன்  ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில்,  ஜெயபால் மோகனும், பிரபாகருடன் மோட்டார் சைக்கிளில் வந்த  இளைஞரும்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
ஜெயபால் பொம்மன் மனைவி திலகவதி, பிரபாகர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் 3 வயது குழந்தை கிரி காயமின்றி உயிர் தப்பினான்.
விபத்து குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸார்  இருவரது சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் காயமடைந்து மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயைப் பார்த்து 3 வயது குழந்தை கிரி அழுதது அங்கு உள்ளோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.