சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூரிலுள்ள அவரது சிலை

Updated On :25 டிசம்பர் 2018, 9:32 am IST

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூரிலுள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு  மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகரச் செயலர் வை.நெடுஞ்செழியன், மாவட்டத் துணைச் செயலர் பசுவைசிவசாமி, பொருளாளர் கண்ணதாசன், நகரக் கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, ஒன்றியச் செயலர்கள் பி.மார்கண்டேயன், கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலர்வி.சி.கே.ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
 எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், முன்னாள் மாணவரணிச் செயலர் தானேஷ், பேரவைச் செயலாளர் காமராஜ், நகர பேரவைச் செயலர் செல்வராஜ்,  நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி, துணைச் செயலர் பழனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.