கரூரில் மதிமுக சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கபினி கேகே.சிதம்பரம் தலைமை வகித்தார். மாணவர் அணி துணை அமைப்பாளர் பி.ஆர். பாஸ்கரன் வரவேற்றார்.
இதில் மாநில இளைஞரணி துணைச்செயலர் ஆசை சிவா, மாவட்ட துணைச் செயலர் வி.பி. கேசவன், நகரச் செயலர் கேஆர். சண்முகம், முன்னாள் வேலாயுதம்பாளையம் சேர்மன் நாச்சிமுத்து, மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆர். மனோகரன், எஸ். பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பெரியார்-அண்ணா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர் இரா. காமராசு, மாநில மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பால. சசிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில் முதல் பரிசை கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் மகேஸ்வரன் பெற்றார். இவருக்கு ரூ. 6,000 பரிசு மற்றும் கேடயமும், இரண்டாமிடம் பிடித்த அன்னை கல்லூரி மாணவி அனுசுயாவுக்கு ரூ.4,000 பரிசு மற்றும் கேடயமும், மூன்றாமிடம் பிடித்த அரசு கலைக்கல்லூரி மாணவர் பாலமுருகனுக்கு ரூ.2,000 பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை மாவட்டச் செயலர் கபினி கே.கே. சிதம்பரம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


