முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாணவர் மூழ்கிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு

கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:36 am IST

கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.
கரூர் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ஹரி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.  
அமராவதியாற்றில் தற்போது தண்ணீர் வருவதால் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிப்பாளையம் அணைக்கட்டு கீழ் பகுதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கரூர் தீயணைப்பு படையினரையும் வரவழைத்து மாணவரைத் தேடும் பணியில் ஈடுபடச் செய்தார். இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் கூறுகையில், தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தண்ணீரில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். 
மேலும் விடுமுறை தினங்களில் மக்கள் குளிக்கும் இடங்களை காவல் துறையினர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 
ஆய்வின்போது மாவட்டவருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.