வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மாணவர் மூழ்கிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு

கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:36 am IST

கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.
கரூர் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ஹரி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.  
அமராவதியாற்றில் தற்போது தண்ணீர் வருவதால் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிப்பாளையம் அணைக்கட்டு கீழ் பகுதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கரூர் தீயணைப்பு படையினரையும் வரவழைத்து மாணவரைத் தேடும் பணியில் ஈடுபடச் செய்தார். இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் கூறுகையில், தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தண்ணீரில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். 
மேலும் விடுமுறை தினங்களில் மக்கள் குளிக்கும் இடங்களை காவல் துறையினர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 
ஆய்வின்போது மாவட்டவருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.