நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கரூர் ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் மனு

கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம்,

Updated On :14 மே 2018, 10:49 pm

கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம், அரங்கநாதன்பேட்டை, சோமூர் கிராமமக்கள் மனு அளித்தனர்.
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பிஎம்.கே. பாஸ்கரன் தலைமையில் அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
கடந்த சனிக்கிழமை (மே 12) நள்ளிரவில் அரங்கநாதன்பேட்டைக்கு திடீரென 2 போர்வெல் வண்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பணியைத் தடுத்து நிறுத்தினோம்.
எனவே கிராமத்துக்குள் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் பகுதிக்கு மீண்டும் வந்து ஆய்வு மேற்கொண்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மத்திய நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்ததாக மனு அளித்த பொதுமக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.