தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கரூர் ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் மனு

கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம்,

News image
Updated On :14 மே 2018, 10:49 pm

DIN

கிராமப் பகுதியில் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகனிடம் நெரூர் தென்பாகம், அரங்கநாதன்பேட்டை, சோமூர் கிராமமக்கள் மனு அளித்தனர்.
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பிஎம்.கே. பாஸ்கரன் தலைமையில் அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
கடந்த சனிக்கிழமை (மே 12) நள்ளிரவில் அரங்கநாதன்பேட்டைக்கு திடீரென 2 போர்வெல் வண்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பணியைத் தடுத்து நிறுத்தினோம்.
எனவே கிராமத்துக்குள் நள்ளிரவில் சட்ட விரோதமாக ஆய்வு செய்த மத்திய அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் பகுதிக்கு மீண்டும் வந்து ஆய்வு மேற்கொண்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மத்திய நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்ததாக மனு அளித்த பொதுமக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.