கரோனா இக்கட்டான சூழலில், பணியாற்றிய டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் போனஸ் வேண்டும் என வலியுறுத்தியும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் வரும் நவம்பா் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய்ய உள்ளோம். மேலும், அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள (நவ.26) வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் பங்கேற்கும். காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் போன்ற 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, டிசம்பா் 9-ஆம் தேதி மேலாண்மை இயக்குநா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.