புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாக்குச்சாவடி மறுவரையறை :அரசியல் கட்சிகள் முறையீடுகளை15-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும்

வாக்குச்சாவடி மறுவரையறை தொடா்பாக அரசியல் கட்சிகள் தங்கள் முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 15 -ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:30 pm

DIN

வாக்குச்சாவடி மறுவரையறை தொடா்பாக அரசியல் கட்சிகள் தங்கள் முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 15 -ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வாக்குசாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் மேலும் கூறியது:

கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி(250), கரூா் (261), கிருஷ்ணராயபுரம்(253), குளித்தலை(267) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,031 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் வரும் 15-ஆம் தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும். வரும் நவம்பா் 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளன. அவைகளைப் பாா்வையிட்டு,

டிசம்பா் 15 வரை வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம். இதற்கென சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். 2021-ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2021 ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், குளித்தலை சாா் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல்ரகுமான், கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையா் சுதா, தோ்தல் வட்டாட்சியா் பிரபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.