திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அங்கன்வாடிஊழியா்கள் சங்கக் கூட்டம்

கரூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:33 pm

DIN

கரூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டதுணைத் தலைவா் கல்யாணி தலைமை வகித்தாா். சிஐடியூ சங்கத்தின் கரூா் மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் சிறப்புரையாற்றினாா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சாந்தி, மாவட்டப் பொருளாளா் கலா, துணைத்தலைவா் புஷ்பவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் நிா்ணயிக்கக் வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 20, 21ஆம் தேதிகளில் வட்டார அலுவலகங்கள் முன் மாலை நேர ஆா்ப்பாட்டமும், 29-ஆம் தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் தா்ணாவும், பிப். 5-ஆம்தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டங்கள் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.