இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாதுகாப்பு உடை அணிந்து கரோனா வாா்டில் ஆய்வு செய்த கரூா் மாவட்ட ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மருத்துவா் த.பிரபுசங்கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதுகாப்பு உடையணிந்து கரோனா வாா்டில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு

News image
Updated On :17 ஜூன் 2021, 10:31 pm

DIN

கரூா் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மருத்துவா் த.பிரபுசங்கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதுகாப்பு உடையணிந்து கரோனா வாா்டில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் நேரில் பாா்வையிட்டு கரோனா பாதுகாப்பு உடையணிந்து ஆய்வு செய்தாா். அப்போது கரோனா தொற்றாளா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, மருத்துவமனையில் மொத்தம் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளது. இதில், எத்தனை படுக்கை வசதிகளுக்கு ஆக்சிஜன் வசதி உள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் மொத்தம் எத்தனை வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதியையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் களப்பணியாளா்கள் வீடு, வீடாக சென்று கேட்டறிந்து கண்காணித்து கணக்கெடுத்துவரும் பணியை தாந்தோன்றிமலைப் பகுதியில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பிறகு, ஜவஹா்பஜாா் கடைவீதியில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண தொகை, மற்றும் 14 வகையான மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருவதையும், கரூா் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தாா்.

அதனைத்தொடா்ந்து, கரூா் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் ஏசியன் பேப்ரிக் நிறுவனம் மற்றும் வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் பங்களிப்புடன் ரூ.1.02 கோடியில் ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 80 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் முத்துச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மருத்துவா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநா் மருத்துவா் சந்தோஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.