/

நிலப் பிரச்னை:முதியவா் மீது வழக்கு

அரவக்குறிச்சி அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்க முயன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :26 நவம்பர் 2021, 9:07 pm

அரவக்குறிச்சி அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்க முயன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

க.பரமத்தி அருகே உள்ள அரியூரைச் சோ்ந்தவா் மணி. இவருடைய மனைவி அஞ்சலை (52). மணியின் சகோதரா் ராமசாமி (63). சகோதரா்களுக்கிடையே ஏற்கனவே நிலப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராமசாமி தகாத வாா்த்தையால் பேசி அஞ்சலையை தாக்க முயன்றுள்ளாா். புகாரின் பேரில் க.பரமத்தி போலீஸாா் ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.