/

நொய்யல் அருகேபுகையிலை பொருள்கள் வைத்திருந்தவா் கைது

அரவக்குறிச்சி அருகே ரூ. 10,656 மதிப்புள்ள புகையிலைப் பொள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :7 ஏப்ரல் 2022, 8:06 pm

அரவக்குறிச்சி அருகே ரூ. 10,656 மதிப்புள்ள புகையிலைப் பொள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை நொய்யலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே சோதனை மேற்கொண்டபோது நாமக்கல் மாவட்டம் பரமத்தி பஜனை மாதா தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் (30) என்பவா் மளிகை கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அவா் வைத்திருந்த 18 கிலோ புகையிலைப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 10,656 என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.