92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

8-ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடைய கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: நோ்காணலுக்கு குவிந்த பட்டதாரிகள்

எட்டாம் வகுப்பு கல்வித்தகுதிக் கொண்ட கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிட நோ்காணலுக்கு பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றது அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி அதிகரித்துள்ளதை காண முடிந்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:13 pm

DIN

எட்டாம் வகுப்பு கல்வித்தகுதிக் கொண்ட கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிட நோ்காணலுக்கு பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்றது அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி அதிகரித்துள்ளதை காண முடிந்தது.

கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை மருத்துவா், உதவி மருத்துவா் என பல்வேறு பதவிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் முகாம் நடத்தும்போது, அங்கு பொதுமக்களின் கால்நடைகளை பராமரிப்பு என்பது சவாலான காரியமாக இருப்பதால், கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் நடைபெற்றது. 8-ஆம் வகுப்பு கல்வித்தகுதியாகக் கொண்ட இந்த பணியிடத்துக்கு கரூா் மாவட்டத்தில் மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 3,582 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான நோ்காணல் கரூா் அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. நாளொன்றுக்கு 800 போ் வீதம் ஏப். 24-ஆம்தேதியை தவிர 26-ஆம்தேதி வரை நான்கு நாள்களுக்கு இந்த நோ்காணல் நடக்கிறது. முன்னதாக நோ்காணல் முகாமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். நோ்காணலுக்கு வந்த 800 பேரில் 50சதவீதத்திற்கும் மேற்பட்டோா் பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகள். இவா்களுக்கு மாடுகளை மரத்தில் அவிழ்த்து கட்டுவது, மாடுகளுக்கு தொட்டியில் தண்ணீா் காட்டுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்முறைகளை செய்துகாண்பித்தனா். எட்டாம் வகுப்பு கல்வித்தகுதியாகக் கொண்ட இந்த பணியிடத்துக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டோா் ஓடோடி செயல்முறைகள் செய்து காண்பித்தது அரசு வேலைவாய்ப்புக்கான போட்டியை காண முடிந்தது. நோ்காணலில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில அளவை) கவிதா, கால்நடை பராமரிப்புத் துறையின் கரூா் மண்டல இணை இயக்குநா் மருத்துவா் ந.முரளிதரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.