பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பரணி பாா்க் வித்யாலயாவில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:58 pm

கரூா் பரணி பாா்க் வித்யாலயா கல்விக் குழுமத்தில் இல்லம்தோறும் மூவா்ணக் கொடி ஏற்றும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 3000 மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டு நாட்டுப்பற்றை பறைசாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பரணி கல்விக் குழுமத் தாளாளா் மோகனரங்கன் மற்றும் செயலா் பத்மாவதி மோகனரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளியின் முதன்மை முதல்வா் டாக்டா். ராமசுப்பிரமணியன் முன்னிலை வைத்தாா். நிகழ்வில் அறங்காவலா் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணிபாா்க் முதல்வா் சேகா், எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தி, பரணி பாா்க் சாரணா் மாவட்டச் செயலா் பிரியா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.