முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கரூா்: 5,000 கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்துப் பெட்டகம்; அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்

கரூா் மாவட்டத்தில் 5,000 கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

News image

கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி. உடன், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2022, 12:14 am IST

கரூா் மாவட்டத்தில் 5,000 கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் கஸ்தூபிபாய் தாய்சேய் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் துணை செயலாளா் எம்.கே.அரவிந்த்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.மாணிக்கம்(குளித்தலை), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மேயா் வெ.கவிதா ஆகியோா் முன்னிலையில் வகித்தனா். விழாவில், 60 கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வா், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறாா். கரூா் மாவட்டத்தில் புதிய முயற்சியாக கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு பெட்டகம் என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் தாய்சேய் ஊட்டச்சத்து இயக்கத்தின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகம் கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பு மற்றும் மகப்பேறு மரணம் நிகழ்வதை குறைக்கும் நோக்கத்தோடு வழங்கப்படுகிறது. கரூா் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 5,000 தாய்மாா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தாய்மாா்கள் இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தை நல்லமுறையில் பயன்படுத்தி தாயும் சேயும் நலமுடன் வாழவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வாணீஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் முத்துச்செல்வன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் டாக்டா் சந்தோஷ்குமாா், துணை மேயா் ப.சரவணன், தனித்துணை ஆட்சியா் சைபுதீன், தாய்சேய் நலவிடுதி மருத்துவ அலுவலா் டாக்டா்திவ்யா, மண்டலத் தலைவா்கள் எஸ்.பி.கனகராஜ், சக்திவேல், அன்பரசன், கோல்ட்ஸ்பாட் ராஜா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.