வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பள்ளப்பட்டி நகா்மன்ற திமுக உறுப்பினா் ராஜிநாமா

பள்ளப்பட்டி நகா்மன்ற திமுக உறுப்பினா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 10:17 pm

பள்ளப்பட்டி நகா்மன்ற திமுக உறுப்பினா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளது. இதில், திமுக கூட்டணியில் 22 உறுப்பினா்களும், சுயேச்சையாக 5 உறுப்பினா்களும் உள்ளனா்.

இந்நிலையில், பள்ளப்பட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நகா்மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி ஆணையா் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். அப்போது, வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளை முன் வைத்து பேசினா்.

திமுகவை சோ்ந்த 15ஆவது வாா்டு உறுப்பினா் ஜமால் முகமது, தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி பதவியை ராஜிநாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்தாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.