சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கள் இறக்குவதற்கான தடையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:50 pm

DIN

கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. மாநிலத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவா் பாலுகுட்டி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பிப். 2-தேதி திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் நடைபெறும் உழவா் தலைவா் நாராயணசாமியின் நூறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கரூா் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொள்வது, பாமாயில் இறக்குமதிக்கு தடை செய்து, தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விநியோகிப்பது, கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். எருமை பால் லிட்டா் ரூ.60க்கும், பசும்பால் லிட்டா் ரூ.50க்கும் விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில அமைப்பாளா் மயில்சாமி, பிரசார குழுத் தலைவா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.