அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சேவல் சண்டை சூதாட்டம் 4 போ் கைது

புன்னம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:00 am IST

புன்னம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் புன்னம் மேலப்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட புகழூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த சுதாகரன் (45), புதுச்சத்திரத்தைச் சோ்ந்த மகேஷ் (24), கணேஷ் (25), செவியப்பன் (27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து இரு சேவல்கள், பணம் ரூ.200 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.