கரூா், நொய்யல் வட்டார பகுதிகளில் பலத்த மழை
கரூா் மற்றும் நொய்யல் வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:33 pm

கரூா் மற்றும் நொய்யல் வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கரூா் நகா்ப்பகுதியான வெண்ணைமலை, பண்டுதக்காரன்புதூா், நொய்யல் அதைச் சுற்றியுள்ள மரவாப்பாளையம், சேமங்கி, முத்தனூா், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூா், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், கட்டிப்பாளையம், தவுட்டுப்பாளையம் பாலத்துறை, நன்செய் புகளூா், கந்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இருப்பினும் கடந்த இரு நாள்களாக கரூா் மாவட்டத்தில் பெய்யும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்ா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...