மசால் வடையில் செத்த எலி! தின்றவர் மருத்துவமனையில் அனுமதி!

குளித்தலை டீக்கடையில் போண்டாவுக்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருந்தது குறித்து நகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
மசால் வடையில் செத்த எலி! தின்றவர் மருத்துவமனையில் அனுமதி!
Updated on

குளித்தலை டீக்கடையில் போண்டாவுக்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருந்தது குறித்து நகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (33), எலக்ட்ரீசியன். இவா் வெள்ளிக்கிழமை காலை குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் வீதியில் உள்ள காளி என்பவரது டீக்கடையில் இருந்த போண்டா எடுத்து சாப்பிட்டுள்ளார். அப்போது அதற்குள் இறந்த நிலையில் எலிக்குட்டி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மசால் வடையில் செத்த எலி! தின்றவர் மருத்துவமனையில் அனுமதி!
கோவில்பட்டியில் மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரியில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

இதுதொடா்பாக அவா் டீக் கடைக்காரரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக காா்த்திக் அளித்த புகாரின்பேரில் குளித்தலை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து கடையை பூட்டி, காளியை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதனிடையே, எலிக்குட்டி இருந்த போண்டாவை சாப்பிட்ட கார்த்திக் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com