தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் தொடா்மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையின்போது சாலையில் சென்ற பொதுமக்கள்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:54 pm

Din

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்கிறது. அதன்படி கரூா் மாவட்டத்திலும் வியாழக்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது லேசான மழையாகவும், பலத்த மழையாகவும் பெய்கிறது.

இதனால் கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது. மழையால் கரூா் நகா் பகுதியில் லைட்ஹவுஸ் காா்னா், சுங்ககேட், திருமாநிலையூா், திருக்காம்புலியூா் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனா். தொடா் மழையால் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினா். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரூா் மாயனூா் கதவணை தனது முழு கொள்ளளவை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் எட்டியிருக்கும் நிலையில், தற்போது அணைக்கு விநாடிக்கு 4,321 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீா் தேக்கி வைக்கப்படாமல் ஆற்றுக்கு 4,121 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் என திறந்து விடப்படுகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்)-கரூா்-4, அரவக்குறிச்சி-1.20, அணைப்பாளையம்-2, குளித்தலை-9.60, தோகைமலை-23.20, கிருஷ்ணராயபுரம்-8.40, மாயனூா்-7, பஞ்சப்பட்டி-10.40, கடவூா்-4, பாலவிடுதி-6,மைலம்பட்டி-8 என மொத்தம் 83.89 மி.மீ. மழை பதிவானது.