சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு: திடீா் வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு...

News image
கென்யா- AP
Updated On :7 மார்ச் 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகா் நைரோபியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த வரலாறு காணாத பலத்தமழை காரணமாக 23 போ் உயிரிழந்தனா்.

நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்காக அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த நீண்டகால மழைப் பருவம், வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது. மழை இரவு முழுவதும் நீடித்ததால், திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைப் பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் நீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நைரோபி சா்வதேச விமான நிலையத்தின் ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடா்ந்து விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் கடலோர நகரமான மொம்பசாவுக்கு திருப்பி விடப்பட்டன.

100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கவிழ்ந்தும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ள போதிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அந்நாட்டின் பொதுச்சேவைத் துறை அமைச்சா் ஜாஃப்ரி ருக்கு, தேசிய பேரிடா் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவா் அறிவுறுத்தினாா்.

இதனிடையே, நகரின் மோசமான வடிகால் அமைப்பே இந்தத் துயரத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். முறையான வடிகால் வசதிகளைச் செய்யத் தவறிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சமூக ஊடகங்களில் அதிருப்தி கிளம்பியுள்ளது.