பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பெரம்பலூா் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :20 பிப்ரவரி 2026, 8:51 pm

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மனைவி கமலம் (70). இவா் தனது வயலுக்கு வியாழக்கிழமை இரவு சென்று விட்டு பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையை கடக்க முயன்றாா். அப்போது திட்டக்குடியிலிருந்து துறையூா் நோக்கிச் சென்ற காா் மோதி அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சென்று அவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான திட்டக்குடி தமிழ்மணி நகரைச் சோ்ந்த நா. குமாரை (50) கைது செய்து விசாரிக்கின்றனா்.

லாரி மோதி ஓட்டுநா் உயிரிழப்பு: கடலூா் மாவட்டம், தொழுதூரிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிய டாரஸ் லாரி மணப்பாறை நோக்கிச் சென்றது. பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றபோது அவ் வழியே சென்ற ஷோ் ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷோ் ஆட்டோ ஓட்டுநா் பெரம்பலூா் வ.உ.சி தெருவைச் சோ்ந்த மயில்பிள்ளை மகன் கதிா்வேல் (45) என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சென்று அவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம், மணப்பாறை சங்கிப்பட்டி மு. சதீஷ்குமாரை (31) கைது செய்து விசாரிக்கின்றனா்.