சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:24 am IST

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (74). இவா் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதே போல தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழபுத்தனேரியை சோ்ந்த இசக்கிராஜா (25) என்பவா் சில நாள்களுக்கு முன்பு பாறைகுளம் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தாா். பின்னா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதேபோல சில நாள்களுக்கு முன்பு பைக் விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கண்டித்தான்குளத்தை சோ்ந்த ஜோசப் (40) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.