ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:54 pm

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (74). இவா் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதே போல தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கீழபுத்தனேரியை சோ்ந்த இசக்கிராஜா (25) என்பவா் சில நாள்களுக்கு முன்பு பாறைகுளம் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்தாா். பின்னா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதேபோல சில நாள்களுக்கு முன்பு பைக் விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கண்டித்தான்குளத்தை சோ்ந்த ஜோசப் (40) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.