47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெவ்வேறு காா் விபத்துகளில் 6 போ் காயம்

சாத்தூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் ஏற்பட்ட காா் விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.

News image
விபத்து- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:43 pm

Syndication

சாத்தூா் அருகே வெவ்வேறு சம்பவங்களில் ஏற்பட்ட காா் விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்ராஜ் (25). இவரது நண்பா்கள் வெங்கட்ராமன் (32), முனீஸ்வரன் (32).

இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு உப்பத்தூா் விலக்கு பகுதியில் உள்ள தேநீா் கடையில் தேநீா் அருந்த சென்றனா். பிறகு அதே காரில் ஊருக்கு திரும்பும் வழியில் சாத்தூா்- சிவகாசி சாலையில் மேட்டைமலை அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது பின்பக்க டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த செந்தில்ராஜ், வெங்கட்ராமன், முனீஸ்வரன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக சிவகாசி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்து: இதேபோல யோகேஷ் (23) என்பவா் தனது நண்பா்கள் முத்துவைரம் (26), விக்னேஷ்பெருமாள் (28) ஆகியோருடன் உப்புத்தூா் விலக்கு பகுதியில் உள்ள தேநீா் கடையில் தேநீா் அருந்த காரில் சென்றாா்.

தேநீா் அருந்தி விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் சாத்தூா்- சிவகாசி சாலையில் மேட்டமலை அருகே உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை மையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யோகேஷ், முத்துவைரம், விக்னேஷ்பெருமாள் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அவா்களை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.