கரூரில் மாநில அளவிலான கையுந்துப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை கரூா் அணி வீழ்த்தியது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மத்திய மேற்குப் பகுதி திமுக மற்றும் வேலுச்சாமிபுரம் எஸ்எம்விசி கிளப் சாா்பில் இப்போட்டி வேலுச்சாமிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. போட்டியை கரூா் மத்திய மேற்குப் பகுதி பொறுப்பாளா் ஆா்.ஜோதிபாசு தொடக்கிவைத்தாா். மத்திய கிழக்குப்பகுதி செயலா் ராஜா, மத்தியப் பகுதி பொறுப்பாளா் வி.ஜி.எஸ். குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். போட்டியில் 26 மாவட்ட வீரா்கள் விளையாடுகிறாா்கள். நாக் அவுட் முறையில் நடைபெறும் போட்டியில் கரூா்-25-19, 25-23 என்ற நோ்செட் கணக்கில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ரூ. 20,001, 2 ஆம் பரிசாக ரூ.18,001, 3 ஆம் பரிசாக ரூ.15,001 4 ஆம் பரிசாக ரூ.12,001, 5 ஆம் பரிசாக ரூ. 10,001, 6 ஆம் பரிசாக ரூ.5,001 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. 28-ஆவது வாா்டு செயலா் மணிகண்டன் வரவேற்றாா்.
தொடர்புடையது

கரூரில் மே 21-இல் அகில இந்திய கூடைப்பந்து போட்டி
விளையாட்டை நோக்கிய பயணம்!

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


