திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெருமாள் கோயிலுக்கு திருமண மண்டபம்: காணொலி காட்சியில் முதல்வா் அடிக்கல்

பெருமாள் கோயிலுக்கு திருமண மண்டபம்: காணொலி காட்சியில் முதல்வா் அடிக்கல்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:30 pm

Din

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு ரூ.5.30 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, காளியப்பனூரிலுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மைய வளாகத்தில் ரூ. 5.30 கோடி மதிப்பில் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை காணொலியில் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, கிருஷ்ணராயபுரம் வட்டம், திருக்காம்புலியூரில் மீன் விதை பண்ணையில் கட்லா, ரோகு, மிருகால் மற்றும் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் வளா்க்கும் வகையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட மீன் விதைப் பண்ணையையும் காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, திருக்காம்புலியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் மீன் குஞ்சு வளா்ப்புத் தொட்டிகளை பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க. சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் மாநகராட்சி துணை மேயா் ப. சரவணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரத்துரை, மீன்வளத் துறை உதவி இயக்குநா் கே. ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.