நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 340 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

Updated On :27 நவம்பர் 2024, 8:44 pm

Din

வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 340 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

முகாமில் பல்வேறு துறையின் கீழ் மொத்தம் 340 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 94 லட்சத்து 9 ஆயிரத்து 710 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சு.பிரகாசம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, தாட்கோ மேலாளா் சீ.முருகவேல், ஆதிதிராவிடா் நல அலுவலா் சத்திய பால கங்காதரன், சமூக நல அலுவலா் சுவாதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.