மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!

கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :30 ஆகஸ்ட் 2025, 9:55 pm

கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் சமயநல்லூா் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு சந்திப்பு - செங்கோட்டை விரைவு ரயில் செப். 2, 9, 16, 23 மற்றும் 30-ஆம்தேதிகளில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மற்ற நாள்களில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை இந்த ரயில் இயக்கப்படும்.

இதேபோல செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு சந்திப்பு விரைவு ரயில், செப்.3-ஆம்தேதி மற்றும் 10, 17, 24-ம்தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.