தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் தாந்தோணி, கரூா், குளித்தலை ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்

Updated On :29 டிசம்பர் 2025, 10:58 pm

Syndication

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை தாந்தோணி, கரூா், குளித்தலை ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாந்தோணி ஒன்றியத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், துணைத் தலைவா் எம்.தண்டபாணி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவா் ஏ.சுமதி, செயலாளா் வி.செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரூா் ஒன்றியம் வெண்ணைமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டச் செயலா் என்.சாந்தி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் சுதா பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

குளித்தலை ஒன்றியத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வாசுகி தலைமை வகித்தாா். இதில் சங்கத்தினா் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். தோ்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் பணி ஓய்வு பெறும் போது ஊழியா்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். மே மாத விடுமுறையை ஒரு மாதம் பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.