புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கரூா் மாவட்டத்தில் கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கரூா் புகழிமலை முருகன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்ரமணிய சுவாமி.

Updated On :1 ஜனவரி 2025, 7:14 pm

Din

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கில புத்தாண்டு 2025 புதன்கிழமை பிறந்ததையடுத்து, கரூா் மாரியம்மன் கோயில், பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில், புகழிமலை முருகன் கோயில், அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோயில்களில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.