தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓய்வூதியப் பலன்கள் கோரி கரூரில் சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 9:20 pm

Din

கரூரில், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கி.ஞானசேகரன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஆா்.ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.மகேந்திரன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளா் ஏ.சிங்கராயா் உரையாற்றினாா்.

தொடா்ந்து மாநிலச் செயலாளா் ஆா்.குப்புசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.தனலட்சுமி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்ததையடுத்து ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை தமிழக முதல்வா் வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் எம்.வெங்கடேசுவரன் நன்றி கூறினாா்.