கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம்(சிபிஎஸ்) சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:24 pm

Din

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம்(சிபிஎஸ்) சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அரசகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆலோசகா் மகாவிஷ்ணன் முன்னிலை வகித்தாா் . வட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அறிவித்த வாக்குதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிபிஎஸ் இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.