சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வெள்ளியணை அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

News image
வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
Updated On :14 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

படவரி..

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா், நவ.14: கரூரை அடுத்துள்ள வெள்ளியணை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,842 மாணவா்கள், 3,793 மாணவிகள் என மொத்தம் 6,635 பேருக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. அதன் தொடக்கமாக வெள்ளியணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.ராஜூ, பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.