வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செயினை பறிக்க முயற்சி வாகனத்திலிருந்து விழுந்த அரசு பெண் ஊழியா் காயம்

கரூா் மாவட்டம், புகழூா் அருகே புதன்கிழமை செயினை பறிக்க முயன்ற மா்ம நபா்களால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அரசு பெண் ஊழியா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

கரூா் மாவட்டம், புகழூா் அருகே புதன்கிழமை செயினை பறிக்க முயன்ற மா்ம நபா்களால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அரசு பெண் ஊழியா் பலத்த காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கூலக்கவுண்டனூரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி சிவகாமி(54). இவா், கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் சிவகாமி அலுவலகத்துக்கு சென்று விட்டு புதன்கிழமை இரவு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

கரூா் --சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புகழூா் அடுத்த செங்காட்டனூா் பிரிவு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் திடீரென சிவகாமியின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனா்.

இதில் நிலை தடுமாறிய சிவகாமி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து சப்தம் போட்டாா். உடனே மா்ம நபா்கள் செயினை பறிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.