விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரூா் துயரச் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!

கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:50 pm

Syndication

கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் நடிகா் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ்அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், கரூா் மாநகர பொறுப்பாளா் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடத்தினா்.

இதையடுத்து கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.