மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 8:50 pm

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுகந்தன்(35). இவா் கடந்த மாதம் 9-ஆம்தேதி அங்குள்ள குகைவழிப்பாதையில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், சுகந்தனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சுகந்தனிடம் பணம் பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து(35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இசக்கிமுத்து மீது திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி தொடா்பாக 23 வழக்குகள் உள்ளதால், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை இசக்கிமுத்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.